Wednesday, February 3, 2016

நிற்கிறேன் பாவமாக

நான்  பெரிய காரியக்காரி அல்லவா
எதையும்  நன்றாகச் செய்வேன் அல்லவா
எதிலும் முதல் என்ற பெருமை  எனக்கு அல்லவா

இன்று அதற்கு  ஒரு திகட்டல்  ஏனோ
 பால் பையை எடுக்க மறந்தேன்  ஏனோ
என்றும் மறக்காதவள் இன்று மறந்தேன் ஏனோ .

அசந்தேன் சற்று நேரம் என்னுடைய உஞ்சலில்
வானரங் களுக்கோ ஏகக் கொண்டாட்டம்  மரங்களில்
பூ னகளுக்கோ அடை விடக் கும்மாளம். மதிலில்


குரங்குகள் பாலை பியித்து உற்ற
 பூனைகள் சப்பி நக்கி உறிஞ்ச
 ஒரே ஆர்பாட்டம் வாசலிலே

எழுந்து ஓடினேன் வாசலை  நோக்கி வேகமாக
ஐயோ என்று கத்தினேன் அழாத  குறையாக
இன்று பாலும் இல்லை மோரும் இல்லை ஒரேயடியாக
 நிற்கிறேன் பாவமாக









No comments:

Post a Comment