Saturday, March 1, 2014

மனிதத் தன்மை

உறுதிப் படுத்திய  பின்
 நிலை மறப்பது
தரம் அல்ல.

உறுதி செய்த பின்
 பின் வாங்குவது
மரபு அல்ல.

உறுதி கொடுத்தப்  பின்
விட்டு விலகுவது
சரியல்ல .

உறுதியானதை   எவ்வழி யாலும்
செய்து முடிக்க வேண்டும்

முடியவில்லை என்றால்
 மன்னிப்புக் கோரி விலக வேண்டும்  .

இதுவே மனிதத் தன்மை
மனிதனின் மேன்மை.

No comments:

Post a Comment