Thursday, March 13, 2014

நேரிலே கண்ட போது

தாயைப் போல் பிள்ளை
நூலைப் போல் சேலை
பாட்டியைப் போல் பேத்தி
 ஒருத் மட்டும் அல்ல
 இருவர் என்ற போது
மலைத்து நின்றேன் .

உருவத்தில் மட்டுமே என்று நினத்தே ன்
 பழக்கத்திலும் என்று அறிந்தேன்
தன்மையிலும் என்று புரிந்தேன்
நடத்தையிலும் என்று கண்டேன்
இரு பேத்திகளும் என்ற போது
அயர்ந்து நின்றேன் .

உறவினர்கள் சொன்னார்கள்
பொருட்டாக எடுக்கவில்லை
நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள்
சரி என்று ஒதுக்கி விட்டேன்
நேரிலே கண்ட போது 
 விக்கித்துப் போனேனே
 

No comments:

Post a Comment