Wednesday, January 1, 2014

ஒரு புது நாள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 
என்ற கூக்குரல்  காதில் 
ஒலித்துக் கொண்டிருக்கும் போது 
மனதில் தோன்றியது 
ஒரு சிறு நெருடல் 
எந்நாளும் நன்னாளே !   
 எவ்வாண்டும்   நல்ல ஆண்டே !
இன்று ஏதும் பெரிதல்ல 
பெரிதெனின்  விடியலும் 
அதன் துவக்கமும்  
அதன்  முடக்கமும் 
இன்று ஏதும் குறைவில்லை 
 குறை என்ற போது
  பொழுது சாயலும் 
அதன்  சரிவும்  
அதன் முடிவும்
விடியலும் சாயலும் 
மாற்றி மாற்றி 
வருதல் ஒரு 
கனவு போல 
இன்று இருப்பவன் 
 நாளை  இல்லை 
 நாளை நடப்பது 
 என்ன என்று  அறியாது 
நம்பிக்கையின் அடிப்படியில் 
வாழும் நாம் 
எதையும் ஒரே வாகில்
ஒரே   எண்ணத்தில் சிந்தித்து  
திடமாக முடிவெடுத்தால் 
ஒவ்வொரு நாளும் 
ஒரு புது நாளே  

No comments:

Post a Comment