Tuesday, January 21, 2014

எதைச் செய்யின்

எழுதுவதெல்லாம் எழுத்து அல்ல .
 பாடுவதெல்லாம்  பாட்டு அல்ல.
பேசுவதெல்லாம் பேச்சு அல்ல.
பார்ப்பதெல்லாம்  பார்வை அல்ல.


எழுதினதைப் படித்தால்  தெரியும்
 குறில், நெடில், எச்சம், என்று பல பிழைகள்
 தொக்கி நிற்கும் வெவேறு இடங்களில்
உறுத்தும் எப்போழுதுமே   கண்ணில் பட்டவுடன்.


பாடுவதைக் கேட்டால் தெரியும்
சுருதி பேதம், இராக மாறாட்டம் 
தாளப் பிசகு  சில  பல காந்தாரங்களில்
ஒலிக்கும் எந்நேரத்திலும் காதில் விழும் போது .


பேசுவதை உற்றுக் கவனித்தால் புரியும்
குரல் ஏற்றம், குறுக்கிடும் பொருள்
உச்சரிப்பு சுத்தம்  சிறய பெரிய   கருத்துகளில்
தெளிய வரும் எப்போதும் அறியும் போது.


பார்ப்பதை  அருகிலிருந்து நோக்கினால் விரியும்
எத்திசையில், எந்நேரத்தில் எந்த எண்ணத்தில
 எதற்காக என்று முனைப்புடன் கவனித்தால்
விளங்கும் அழகாக அப்போதே   ஆராயும் போது.


எதைச் செய்யின்

  

No comments:

Post a Comment