Saturday, January 18, 2014

காண வாரிர் திரளாக.

கோலாகல கொண்டாட்டம் 
 தெருவெல்லாம்  ஒளி  வெள்ளம்
வீதியெல்லாம் ஒலி  முழக்கம் 
 பாரெல்லாம் மக்கள்  கூட்டம் .

கடல் கடந்த  திருவிழா 
 தண்டாயுதா பாணிக்கு   பூசத் திருநாள் 
பிறந்த நாள்  ரத ஓட்டம் 
மலைக்க வைத்த  விழாக் கோலம்.

காவடியும் பால் குடமும் 
தேங்காயும், பாலும்
 பூவும்  பழங்களும் 
மலை மலையாகத திரள 

பினாங்கில் பூசம் 
கண் கொள்ளாக்   கா ட்சியாம் 
இனம் பாரா திருநாளாம் 
காண வேண்டிய திரு நாளாம் .

காவடி பார்த்துள்ளோம் 
 வேல் காவடி, அலகு  காவடி,
மயில் காவடி  கண்டோம்  இங்கே 
வகை வகையாக .தன்னை வருத்திக் கொண்டு.

வேல் வேல் என்ற முழக்கம்  
ஆயிரம் , பத்தாயிரம் தேங்காய்  
ஆசை தீர உடைக்க  மட மடவென்று 
சீனனும் தமிழனுக்கு போ ட்டியாக.

அறிந்தேன் திருஅருளை 
வேறு வகையாக  வேறு மாதிரியாக  
முரட்டு ஆவேசம் கண்டேன் இங்கே
ஆணவமான அன்பைக் கண்டேன் மிகுதியாக.

  
பன்னிரண்டு மாதங்களில் முருகனுக்கு விழா 
ஒவ்வொரு ஊரிலும் நகரத்தார்கள் எடுக்கும் விழா 
 பூசம்,மகம், உத்திரம், பௌர்ண மி, விசாகம்,
ஆடி வேல், என்று மாதந்தோறும்  தண்டாயுதபாணிக்கு 
கடல் கடந்த கொண்டாட்டம் காண வாரிர் திரளாக.  

 





No comments:

Post a Comment