Sunday, January 19, 2014

இப்ப அவனை அறிந்து.

உயர்ந்து நின்றான்  என் முன்னே
 நெடிது உயர்ந்து நின்றான்
உருவத்தால் உயரமாக நின்றான் 
நிமிர்ந்து நோக்கினேன் அவனை.

நீண்ட நெடும் வடிவமாக நின்றவன்
 உயர்ந்து நின்றான் செய்கையிலும்
மலைத்து நின்றேன் அவனைப் பார்த்து
அண்ணாந்து நோக்கினேன் இப்ப அவனை .

தன்னில் உயர்ந்தான் அவன் முற்றிலும்
குணத்தால் வானம் தொட்டான்
 வியப்புக்குள் ளானேன்    அவனைக்  கண்டு 
 எட்டி எட்டி கண்ணகலக்   கண்டேன் இப்ப அவனை.

படிப்பில்  சிறந்தான் அவ்வுய ரமானவன்.
வேலையில் சிறப்புற்றான்  அவ்வ்யுர்ந்தவன்
 ஈகையில்  சிறப்படைந்தான்  அவ்வுய ர்ந்து  நின்றவன்
தள்ளி நின்றே சிலாகித்தேன் இப்ப அவனை.


சிகரம் தொட்ட அந்த உயர்ந்த மனிதன் 
 குனிந்து சென்றான் கதவின் நுழை வாயிலேலே
உனர்த்தினான் உயரம் தாழ்ந்து போவதற்கே
 அஞ்சி நின்றேன் இப்ப அவனை அறிந்து.



No comments:

Post a Comment