பேட்டி ஒன்று கண்டேன்
பெரிய புள்ளி .
படித்தது என்னவோ
பெரிது இல்லை
கையிருப்பு என்னவோ
பெரிதாக
அறிவுத் திறனோ
பெரியது அல்ல .
ஆளோ நீண்டு பருத்து
பெரும் உருவமாக.
பேச்சோ வள வள என்று
பெரிய கருத்துக்கள் காணேன் .
வியக்கும் படி எதும் இல்லை
இருந்தும் பெரிய மனிதன்.
கடமை என்று அள வளாவினேன்
தலை எழுத்தை நொந்து கொண்டு.
No comments:
Post a Comment