பேசுபவன் பேசிக் கொண்டே இருப்பான்
கேட்டுக் கொண்டே இருந்தால்
பேசிக் கொண்டிருப்பான் தொடர்ச்சியாக .
பேசுவதை நிறுத்துவதற்கு என்ன வழி
பேசாமல் இருப்பதே என்று ஒரு சாரார்
சொல்வது கேட்பதற்கு நன்று.
பேசுவதை தடை செய்வதற்கு என்ன மாற்று
வாயடைப்பதே என்று மற்றோருவர்
சொல்வது செய்வதற்கு நன்று.
எது மிகவும் பொருத்தம் என்று நோக்கின்
சில இடங்களில் வாளாவிருப்பது உசிதம்
பல நேரங்களில் திருப்பிக் கொடுப்பது அவசியம்.
பேசுபவன் என்றும் தன நிலை மறந்தவன்
வெட்டி பேச்சும் விதண்டாவாதமும்
அவனின் குறுகிய எலலை .
பேசியே வாழ்கிறான் காலம் முழுவதும்
பயன் படாத அடாவடித்தனமும்
எடுபடாத விளக்கமும் அளித்து
தானே தன்னை அழிக்கிறான்
No comments:
Post a Comment