Friday, January 31, 2014

அவள் வாழ்க்கை

பால் ஏந்தினாள் 
  பழம் ஏந்தினாள் 
பாலும் பழமும் ஏந்தினாள் 
வாழ்கையை ஏந்த வில்லை.

பாசம் காட்டினாள் 
நேசம் காட்டினாள்
பாசமும் நேசமும் காட்டினாள்
வாழ்கையில் எதையும் காண வில்லை

சாதுரியம் . இருந்தது
சா துர்த்தியமும் இருந்தது
சாதுரியமும் சாதுர்த்தியமும் இருந்தது 
வாழ்க்கையில் எதுவும் இல்லை

ஏன் என்று புரியவில்லை
தவறு  எங்கே  என்று தெரியவில்லை 
மனது வலிக்க உடல் குலுங்க
அழுதவாறே போகிறது அவள் வாழ்க்கை 

No comments:

Post a Comment