Thursday, January 23, 2014

என்னே அற்புதம் !

எண்ணங்கள் மனம் போலே
கருத்துக்கள் அறிவுத்  திறனைப்   பொறுத்தே
உணர்ச்சிகள் மனத்தின் பிரதிபலிப்பே
பேச்சுக்கள் அறிவின் வெளிப்பாடே.
இவை யாவின் வாழ்வியல் முறையே.

சிந்தனையும் நல்ல விதமாக அமைந்து
உணர்ச்சிகள் கட்டுக்குள் அடங்கி 
பேச்சு  அளவோடு பொருந்தி 
அறிவு திற னொடு இயங்கினால்
வாழ்வு வசந்தமாக விரியத் தொடங்கும்     


கால் போனபடி நடந்து செல்வது  இலக்காகா து  
கைக்கு வந்த படி வரைவது ஓவியம் ஆகாது .
எதற்கும்   ஒரு வரை  முறை உண்டு.
அதன் வழி  செல்வதே   சாலச் சிறந்த்தது
முறையோடு செய்தால்  முறைகேடு இருக்காது .

வாழும் கலை என்ற பிரச்சாரம் இதுவே
இதனை  உணர்த்த ஓர் இயக்கம்
அதற்கு உலகாளவிய விமர்சனம்
ஆஹா ! ஆஹா ! என்னே அற்புதம் என்ற கரவொலி
சின்னஞ் சிறியதை  மலையென் றாக்கும் ஒரு கும்பல்
தாரை வார்க்கிறோம் பணத்தையும் நேரத்தையும்.


No comments:

Post a Comment