Thursday, January 23, 2014

யாரைச் சொல்வது குற்றம் ?

இனிப்பும் ,புளிப்பும்,
காரமும், துவர்ப்பும்  
ஒரு ங்கே அமைந்தால்  
பண்டம் தேடி  வெளியே 
அலையப் போவதில்லை .

இனிமையும், இயல்பும் 
தன்மையும் தாக்கமும் 
 ஒரு சேரப் பெற்றால் 
 துணை தேடி  வெளியே 
அலையப் போவதில்லை.

இருக்கவேண்டியது இருந்தால் 
இருக்கும் இடத்தில் இருந்தால்  
அலைபாய வேண்டியதில்லை 
அலை மோதத்  தேவை இல்லை 
நிலை மாறப்  போவதில்லை .


இல்லாமல் போனதாலே  
ஏதும் அணுக முடியாதானாலே
எதுவும் கிடைக்காதானாலே  
வெளியே போகும் எண்ணம்  வந்திடும் 
யாரைச் சொல்வது குற்றம் ?
அலைவதையா, இறுகினதையா !

No comments:

Post a Comment