Tuesday, January 21, 2014

நிழலும் நிஜமும்

கற்பனை வளமானது
கற்பனயில் சிறகடித்து
வானத்தில் பறக்கலாம்
விண்ணையும் மண்ணையும்
ஒன்று சேர்க்கலாம்
விண்ணில்  கற்களையும்
மண்ணில் நிலவையும்  காணலாம் .

உண்மை சுடும்
உண்மை  எரிக்கும்
நினைவில் வந்த படி
நினைத்த வழி முறையை ஏற்காது
உண்மை என்ற நெருப்பு
நீலம் மஞ்சள் ஆகாது
போவது ஒரே வழி  வலியுடன் .

கற்பனையில் உண்மையைப் புகுத்தி
கொஞ்சம் வர்ணனைக் கலந்து
அழகான கலவையில் வருவது கவிதை,
 கதை,  இலக்கியம் என்று கொண்டு
உண்மையைக்   காரணங்களுடன்
காரியங்களுடன்   செயல் முறையோடு
நடத்திக் காட்டுவது விஞ்ஞானம் .
நிழலும் நிஜமும் வாழ்க்கையே




No comments:

Post a Comment