Tuesday, January 14, 2014

புகையை வாங்கி

புகை வந்தது
அலை அலையாக
கண்ணைக் கரிக்கவில்லை.
எக்காரணம் கொண்டும்.

புகை  சன்னமாக
சுருண்டு சுருண்டு  வந்தது
நெடி தூக்கலாக  இருந்தது
 வித்தியாசமாக .

புகை ஊடுருவியது
மிகுந்த வேகத்தில்
நெஞ்சுக்குள்
சுருண்டுக் கொண்டே

புகை  அரித்தது
நெஞ்சைக் கூட்டுடன்
அடைத்தது   முழுவதும்
மூச்சு  புக முடியாமல்.

புகை தின்றது
சுவாசப்பையை
கோளாறு கண்டது
 சுவாசம் திணறலுடன்.

புகை வலிய வரவில்லை
விலைக் கொடுத்து
வாங்கிய பின்னே
வந்த கெடுத்தது.

கண்டேன் ஆற்றாமையுடன்
வம்பாக வாங்கிய பழக்கம் 
உயிர் கொல்லியாக மாறிய
 வினையை  துயரத்துடன்.
 
   

No comments:

Post a Comment