Friday, January 24, 2014

சுனாமி

கடலோரம் அடித்தக் காற்று
அள்ளித் தூக்க
அறை கூவலுடன் வந்த அலையோ
தூக்கி அடிக்க
வலை விரித்த மீனவனோ
பாய்ந்து திரும்ப
படகும்  அதுனுளிருந்த
பொருட்களும்அடித்துச் செல்ல
கடல் பேரோசையுடன்
சீறி ஊருக்குள் புக 
குழந்தைகளும்  பெண்களும்
பதறி ஓட
அங்கு நிகழ்ந்தது
ஓர்  அவலம் .
அங்கு அரங்கேறியது
ஓர் ஆபத்து
சுனாமி என்ற பெயருடன் 

No comments:

Post a Comment