ஒரு குண்டு மல்லிகை
வெள்ளை வெளேரென்று
பச்சை அருகோடு
மெல்லிய தென்றலில்'
அசைந்து ஆட
ஒரு மஞ்சள் ரோஜா
தங்கம் போல பளிச்சென்று
கரும் இலையின் மேல்
தவழ்ந்து தழுவி
அழகு நடை போட
ஒரு சிகப்பு செம்பருத்தி
சற்று உயரே இருந்து
எட்டிப் பார்த்து
குனிந்து குவிந்து
மகிழ்வுடன் கும்மாளமிட
வாடா மல்லியும் தன பங்குக்கு
வாடாமல் குலுங்க
சிவந்திய்ம் அரளியும்
பெருமிதத்துடன்
அழகாய் எடுத்துக் கூட்ட
கண்டேன் பெருமிதத்துடன்
இயற்கையின் பேரழகை
கண்களும் மனமும்
பொங்கிக் ததும்ப
மயங்கி நிற்கிறேன்
பரவசமுடன் .
No comments:
Post a Comment