Saturday, January 25, 2014

தவிக்கும் நெஞ்சங்கள்

வேற்று நாட்டிலே வாழ 
 வேற்று இனத்துடன் வாழ 
 வேற்று  மொழி பேச  
வேற்றுக் கலாச்சாரம்  புரிய 
வேற்று பழக்கங்கள்  புக 
வேற்றுமையே வாழ்க்கையாக 
வாழ வேண்டிய நிமித்ததிலும் 
விட முடியவில்லை எவ்விதத்திலும் என்னால் 
நம் தாய் மொழியை தேன் தமிழை   
நம் உடையை அதன் அழகை 
நம் மத வழக்கத்தை குங்குமத் திலகத்தை
சற்று வேறுபாடாகத்  தோன்றும் 
இன்று நம் நாட்டிலே ஓட்டும் திலகம் 
வழக்கத்தில் வந்து விட்ட நேரத்தில் 
என் போனற  சிலர இன்றும் மஞ்சள் குங்குமத்தை நாட  
நம் உணவை சைவ முறையை 
 மறக்க முடியவில்லை  நம் இட்லியை 
நினைவுக்கு வரும் நம் வற்றல் குழம்பை 
குடியேறிய நாட்டில் அடைகிற பணப் புழக்கத்தை 
பிறந்த  நாட்டிலே கிட்டும் உணர்வை ,பற்றுதலை 
 எது பெரிது என்று அறிய முடியாமல் தவிக்கும் 
நெஞ்சங்களுக்காக  ஆதங்கத்துடன் எழுதும் வரிகள். 

No comments:

Post a Comment