Sunday, January 26, 2014

எப்போது எல்லாம் முடியுமோ ?

கழிந்தது தொல்லை
 என்ற நினைத்தப் பொழுது
கிளம்பியது புதிதாக
 ஒன்று சடாரென்று


முடிந்தது பொறுப்பு
 என்று அமர்ந்த பொழுது
 முளைத்தது மற்றொன்று
வேகமாக சடுதியில்

படுக்க வேண்டியது தான்
என்று சாய்ந்த பொழுது
வந்தது வேலை
முக்கியமாக சட்டெனறு  .

எப்போது எல்லாம்  முடியுமோ?
என்று நினைக்கையில்
தோன்றியது உடனே
 கண்ணை மூடும் பொழுது
நிரந்தரமாக. 

No comments:

Post a Comment