இறையருள் இறைவன்
என்றே எப்போதும்
பேசுவான் .
திசை நோக்கி
நேரம் அறிந்து
வழிபடுவான்.
கை தலைக்கு மேலே தூக்கி
கை நெஞ்சின் அருகே வைத்து
தொழுவான் .
திருநீறு பூசுவான்
வலதிலிருந்து இடம் வரை
நெற்றி நிறைய .
பாடுவான் ஆடுவான்
குதிப்பான் இறைவனை
துதித்து
எல்லாம் உண்மையா
யாவும் அன்போடும்
அருளோடுமா .
இல்லவே இல்லை
யாவையும் நடிப்பு
வெறும் வெட்டி .
இறையுணர்வு என்ற
போர்வையினுள்ளே இருக்கிறான்
கபடன்.
காவியும் சடை முடியும்
மெய்யன்பர்களுக்கு என்ற
காலம் போய்
பொய்காரன்க்கே.
No comments:
Post a Comment