Tuesday, January 28, 2014

இறையுணர்வு

 இறையருள்  இறைவன் 
 என்றே எப்போதும் 
 பேசுவான்  .

திசை நோக்கி  
நேரம் அறிந்து 
வழிபடுவான்.

கை தலைக்கு  மேலே  தூக்கி 
 கை நெஞ்சின் அருகே வைத்து 
தொழுவான் .

திருநீறு பூசுவான்
 வலதிலிருந்து  இடம் வரை 
 நெற்றி நிறைய .

பாடுவான்  ஆடுவான் 
குதிப்பான்  இறைவனை
 துதித்து 

எல்லாம் உண்மையா 
யாவும் அன்போடும் 
 அருளோடுமா .

இல்லவே இல்லை  
யாவையும் நடிப்பு
வெறும் வெட்டி .

இறையுணர்வு என்ற 
போர்வையினுள்ளே   இருக்கிறான்
கபடன்.

காவியும் சடை முடியும் 
 மெய்யன்பர்களுக்கு   என்ற 
காலம் போய்
பொய்காரன்க்கே. 
 


 

No comments:

Post a Comment