Sunday, January 5, 2014

எதையும் தாங்கும் மனமே

முள் மீது அமர்ந்த ரோஜாவே
உன்னை முட்கள் குத்தவில்லையா..

தரை மிது விரித்தக்   கம்பளமே
மிதி படுவது  உனக்கு சிரமமில்லையா..

நிலம் மிது கிடக்கும் மண்ணே
உன் மீது காறி  உமிழ்வது  வருத்தமில்லையா .


மரமிது  இருக்கும் கனியே
கிழே  விழும் போது அடிபடவில்லையா .

பாலைக்  கொடுக்கும் பசுவே
உன் மடியைக் கறக்கும்  போது  தெறிக்கவில்லையா. 

பிள்ளையைப் பெற்ற தாயே
உன் பிள்ளை உன்னை  உதைக்கும் போது வலிக்கவில்லையா .


எதையும் தாங்கும் மனம் வேண்டும்
உம்மைப் போல் பலவற்றைக்  கண்டவுடன்  தெளிவாக .



  

No comments:

Post a Comment