Thursday, January 2, 2014

இயற்கையும் செயற்கையும்

 காரிருளைக்  கிழித்துக் கொண்டு
 கருமேகங்கள்  திரண்டு
 ஒன்றுடன் ஒன்று  மோத
பளீர் பளீர் என்று
வெள்ளி  போல் மின்னல் வெட்ட
தடால்  தடால் என்று
பெரும் ஓசையுடன்  இடி இடிக்க
காதுகள் செவிடாகுமோ
கண்கள் குருடாகமோ
என்று அஞ்சி நடுங்கி
ஒரு மூலையில்  ஒதுங்கி
நின்ற  போது
வீட்டிலும் இருள்  கவ்வ
மின் தடை ஏற்பட
இயற்கையை வெல்ல
 செயற்கையால்   முடியாது
எப்போதும்
என்று நிதர்சனம் புரிய
செய்வதறியாது  
மௌனமாக நின்றேன்
சிலை போல

No comments:

Post a Comment