Wednesday, January 29, 2014

வாழ்ந்தால் என்ன !

பழம் வேண்டும்
பால் வேண்டும்
பாயசமும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
 எனக்கே எனக்கு

நீ வேண்டும்
 நான் வேண்டும்
நாலும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு  .

 அது வேண்டும்
 இது வேண்டும்
ஆவதெல்லொம் வேண்டும்
 எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .

அறிந்தது வேண்டும்
 அறியாததும் வேண்டும்
அழகானது வேண்டும்
 எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .


எனக்கு வேண்டும்
 எனக்கே வேண்டும்
 என்ற நினைப்போடு
வாழும் நாம்
எதற்கு வாழ்கிறோம் ?

பண்டத்துக்கும்,  பகட்டுக்கும்
அழியும்  அழகுக்கும்
அழிகின்ற பொருளுக்கும்
தனக்கே என்று வாழும் நாம்
 வாழ்ந்தால் என்ன !
 வாழா விட்டால் என்ன !

No comments:

Post a Comment