Sunday, January 12, 2014

கழுதை தேய்ந்து கட்டெ றும்பு ஆனது

கழுதை தேய்ந்து கட்டெ றும்பு ஆனது
கட்டெறும்பு என்ன ஆனது ?
கேள்விக்கு  என்ன சொல்வது.
கட்டெறும்பு  கடித்தது.
 பின் வலித்தது வெகுவாக
.வீங்கியது   பெரிதாக
என்று சொல்லிக் கொண்டே போகலாம்
எதற்கும் ஒரு முடிவு
 எதிலும் ஓர் குதர்க்கம் என்றால்
 அதற்கும் ஒரு எல்லை  உண்டு.

குறும்பு  ஒரு அளவுக்கு மேல் போனால்
குசும்பு என்று கொண்டு கலகம் தோன்ற
ஏதுவாய்  நிலைப்   பெற்று வெடித்து
சிதற தூண்டுகோலாக அமைய 
விளையாட்டு வினையாக
வன்முறை தலை விரித்தாடும் அபாயம்
வெகு அருகில்  வந்துவிட  சற்று
 எதிலும் நிதானம் இருக்க  வேண்டியதின்
அவசியத்தை   காட்டுவதே என் நோக்கம்.

மேலே  குறிக்கப்பட்டது ஒரு சான்று





No comments:

Post a Comment