Thursday, January 30, 2014

குரங்குக் குட்டி

 என் வீட்டின் முன் ஒரு குரங்கு
தவ்வித தாவி விளையாடும்  குட்டி
குட்டிக் கர்ணம் போட்டு வாசலுக்கு வந்தது
மெதுவாக கதவை மூடினேன் .

தோட்டத்தில் ஆட்டம் போட்டு ஜொலித்தது
சாளரத்தின் வழியே கண்டேன் கூத்தை
என் தோட்டத்தில் பந்தாடியது
 பூக்களைப் பறித்து வீசியது .

போகுமா போகாதா என்று நினைகையில்
 வந்தது அதனுடைய அண்ணன்
இரண்டும்   சூரையாடின என் பழ  மரங்களை
 கொண்டாட்டமும்  கும்மாளுமாக .

விட்டினுல்லிருந்து பார்த்தேன் வேடிக்கையை
துரத்த மனம்  வர வில்லை  எனக்கு
மனம் இலகுவாகி யது எதனாலோ
கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.




No comments:

Post a Comment