Friday, January 31, 2014

தமிழ் கவிதையின் அழகு.

இரண்டு அடியில்
 எழுதிய  வள்ளுவன்  
ஒரே யடியாகப்   புகழ் பெற்றான்  
உலகம் போற்றும் 
 திருவள்ளுவனானான்  .

நாலடியில் எழுதி 
நான்கு  மறைகளையும் கொணர்ந்து 
உலகுக்கு  உணர்த்தி 
நாழிகையிலே  உயர்ந்தான்
நாலடியார் என்றப பெயருடன்  .

தெருவெல்லாம் நடந்து 
ஊர் ஊராகத் திரிந்து 
சிறார் களையும் பெரியவர்களையும் 
ஆத்திச்சூடி பாடி தன பால்
 ஈர்த்தாள்  அவ்வைப்  பாட்டி .

முலமும் மந்திரமும் 
மருந்தும், பயனும் 
நடப்பும், நடவடிக்கையும் 
வாழ்வும், வாழ்வியலும் 
பயிற்று வித்தான்  திருமுலன் . 

தமிழில் காணாத 
 கவிதைகள்   இல்லை 
 சொல்வதைச சொல்லி 
சொல்ல  இயலாத்ததை  
இலை மறைகாய் மறைவாக
எடுத்தியம்பும்   விதம் ஓர் அழகு.



 .

No comments:

Post a Comment