இரண்டு அடியில்
எழுதிய வள்ளுவன்
ஒரே யடியாகப் புகழ் பெற்றான்
உலகம் போற்றும்
திருவள்ளுவனானான் .
நாலடியில் எழுதி
நான்கு மறைகளையும் கொணர்ந்து
உலகுக்கு உணர்த்தி
நாழிகையிலே உயர்ந்தான்
நாலடியார் என்றப பெயருடன் .
தெருவெல்லாம் நடந்து
ஊர் ஊராகத் திரிந்து
சிறார் களையும் பெரியவர்களையும்
ஆத்திச்சூடி பாடி தன பால்
ஈர்த்தாள் அவ்வைப் பாட்டி .
முலமும் மந்திரமும்
மருந்தும், பயனும்
நடப்பும், நடவடிக்கையும்
வாழ்வும், வாழ்வியலும்
பயிற்று வித்தான் திருமுலன் .
தமிழில் காணாத
கவிதைகள் இல்லை
சொல்வதைச சொல்லி
சொல்ல இயலாத்ததை
இலை மறைகாய் மறைவாக
எடுத்தியம்பும் விதம் ஓர் அழகு.
.
No comments:
Post a Comment