Thursday, January 2, 2014

அகில கோடி பிரம்மாண்டமாக

அதி காலையிலே
விடியும் நேரத்திலே
கா கா என்று
 காகம் கரைய
ட்வீட் ட்வீட் என்று
குருவிகள் கூவ
வீடுகள்  விழிப்பு  காண
 கதிரவன் மெல்ல
புவியில் நுழைய
ஒரு பக்கத்தில்
உலகம் துயில் கொள்ள
 மறு பக்கத்தில்
கண்ணைக் கசக்கிக்
சோம்பல் முறித்துக் கொண்டு எழ
இந்த மகா  இயக்கம்
மீண்டும் தொடர
 இயற்கையும் மனிதனும்
 பின்னி பிணைந்து
 வாழும்  காலம்
அழகான காட்சியாக  விரிய
எந்நேரமும் இவ்வியக்கம்
 எதற்கும்  எ ன்ன காரணத்துக்கும்
மழை, புயல், பேரலை
போன்ற சீற்றங்களுக்கு
அடி பணி யாமல்
சுற்றிக் கொண்டே  இருக்கும்
நேர்த்தி  பிரமிப்புட்ட
அகில கோடி பிரமாண்டத்தை
நோக்கி மலைத்து நிற்கிறேன்
ஒரு சிறு குறி யிடாக !





  

No comments:

Post a Comment