Friday, January 1, 2016

விலகி விட்டேன்

அவனுக்கு ஆத்திரம்
சொல்லொண்ணா    ஆத்திரம்
 கனன்று கொதித்து தெறிக்க
 வெந்து புழுங்குகிறான்
கொஞ்சம் நஞ்சமல்ல .


இன்னொருவனுக்கு  பொறாமை
மட்டில்லா பொறாமை
திரண்டு  மேவி  கொப்பளிக்க
பொங்கி மயங்குகிறான்
இன்று நேற்றல்ல.

காண்கிறேன் இருவரையும்
 வியப்புடன் சற்று நேரம்
ஏன்  என்று புரியாமல் விழிக்க
விலகி விட்டேன்  ஒரு வழியாக
எப்போதும் எந்நேரமும்.

No comments:

Post a Comment