Friday, January 22, 2016

நான் கண்ட அருமை

ஒரு மலரின் மலர்ச்சி மனத்தை அள்ளும்  
ஒரு குழந்தையின் சிரிப்பு கொள்ளை கொள்ளும் 
 ஒரு  ஓவியம் மனத்தை உருக்கும்
ஒரு நேர் த்தியான கட்டிடம்  வியக்க வைக்கும் 
 ஒன்றுக்கு ஒன்று போட்டிபோடும் 
 இர அழகா அது பேரழகா என்று தோன்றும் 
 ஒன்றே ஒன்று யாவற்றையும் விட்டு 
விடுபட்டு நிற்பது இனிமை பொங்குவது 
 எது என்று கொள்வீர்கள்  
 நான்   கண்ட அருமை  ஒன்றே ஒன்று தான் 
 எது என்று புரிந்திருக்கும் என்ற நினைக்கறேன் 
 இல் லையா இது வரை  தெரியவில்லையா 
சொல்லி விடுகிறேன்  துரிதமாக 
 குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு.


No comments:

Post a Comment