Sunday, January 31, 2016

காதல் காதல்

காதல் காதல் என்று சொல்வது
 காதல் இல்லையேல் சாதல் என்பது
 ஒரு புரியாத   புதிர்


அன்பு பெருகும் போது  உணர்வு
 சற்று கூடுதலாக வேலை செய்ய
மனதை ஒரு வழியில் விடாமல்  இழுக்க



மனிதன் தன வசம் இழக்க
அறிவு  சில பொழுதுகளில் தடுமாற
 மனம் கொள்ளா ஆட்டம்  தொடங்க


அந்த ஈர்ப்பு  அந்த  வலிமை
 அந்த நேசம்  அந்த பிணைப்பு
 காதலாக வடிவெடுக்க

உணர்ச்சிகள் மேலோங்க
 அழகு ஒரு வகையில்
 மனதில் ஆர்பரிக்க

அன்பு மற்றொரு வழியில்
 மனதை ஆட்டுவிக்க
அறிவும் சளைக்காமல்
மனதை  வம்பிழுக்க


மனது   வயப்பட்டு
காதல் காதல் என்று புலம்ப
 சாதலும் இடம் பெற்று
 ஒரு துயரம்  அரங்கேறுகிறது.

No comments:

Post a Comment