Monday, January 25, 2016

ஒரு பெண்ணைப் பார்த்தேன்

ஒரு பெண்ணைப் பார்த்தேன்
 பேச்சில் ஒரு நயமில்லை 
பார்வையில் ஒரு கனிவில்லை 
 நடையில்  ஒரு நளினமில்லை 
திமிர் தலை தூக்கி நிற்க  
அடம் நிலை கொள்ள மறுக்க 
 புறத் தோற்றத்திலும்  கண்டேன்  
 சற்று எதிர் மறையாக 
 தாட்டியும் உயரமும் 
 சற்றுக் கூடுதலாக 
 என்னால்  கேட்காமல்  
 இருக்க முடியவில்லை 
 மெதுவாகக் கேட்டேன் 
 உன் பெயர்  என்னம்மா? 
என்று  அதிகாரக் குரலிலே 
 சொன்னாள் அழகு  என்று. 

No comments:

Post a Comment