Wednesday, January 27, 2016

கதிரவனும் சந்திரனும்

கதிரவனும் சந்திரனும்
 தங்கள் வேலையை
 காலையும்  மாலையும்
 என்று பிரித்துக் கொள்ள

 பகலவன் கா லை நேரம்
 சற்று அடக்கி   வாசிக்க
 உச்சிப்    பொழுதிலே
உச்சமாக  ஒளி  வீச


மாலைப் பொழுதிலே
வேகத்தை  குறைத்து
 பின் ஒரேயடியாக
 மறைந்து  விட

வருகிறான் சந்திரன்
 கோலோச்ச  குளுமையாக
 அழகு நிலாவே என்று
 அழைக்கத் தோன்ற


ஒரு வித்தியாசமான
வழக்கம் பழகினான்
 அரை மாதம் வளர
 அரை மாதம் குறைய

என்னே ஓர் அதிசயம்
 நிலாவும் தன அழகிலே
 ஞாயிறும் தன
 ஒளி  வெள்ளத்திலே .


மனிதனுக்கு இரண்டுமே
 கண்கள் போல
 விலை மதிக்காத பரிசு
என்றே  கொள்வோமாக





No comments:

Post a Comment