Sunday, January 24, 2016

தரையில் போடப்படும் கல்லிலே

தரை தளத்தில்  ஒரு கற்பனை
 மஞ்சள் பூக்களும்
 சிகப்பு பூ க்களும்
 அடர்த்தியில்லாமல்
 நேர்த்தியாக.

 நான்கு கற்களில்  ஒரு
 பூ விரிகிறாற் போல்
மொட்டவிழ்ந்து  மலராகும்
  அதீத தருணத்தை
மென்மையாக


வரை தீட்டுகிறான்
 கலைஞன்  தரையில்
போடப்படும் கல்லிலே
எங்கும் நோக்கின்
 மலர் கமபளமாக .


மஞ்சள் மங்களத்தையும்
 சிகப்பு   பூரிப்பையும்
அள்ளித் தெளிக்க
 கண்டேன் ஒரு
 அதிசயமான   கற்களான
தரை விரிப்பை






No comments:

Post a Comment