Tuesday, January 26, 2016

என்னோடு பேசுவதே

என்னோடு பேசுவதே
என்னோடு போக்கு
கேள்வியும் நானே
 பதிலும் நானே .

 கோபத்தில் சிடுசிடுத்து
சிரிப்பில் கலகலத்து
 துன்பத்தில் அழுதழுது
 ஆத்திரத்தில்  படபடத்து
 மகிழ்வில் துள்ளித துள்ளி.

என்னுள்ளே எழும்
 ஒலிகளும் ஓசைகளும்
 பலவாறாக வெளி வந்து
 பேசுகிறேன் இன்றும் அன்றும்
அன்று என் தாய்க்கு ஒரு பயம்
 மகளை  பைத்தியம் என்று
எண்ணுவார்களோ என்று.



இன்று அவள் இல்லை  விசனப்பட


 தொடர்ந்து   பேசுகிறேன்
என்னுடன் ஆனந்தமாக
 கோபம் குறைந்து ,
ஆத்திரம் மட்டுப்பட்டு
சிரிப்பு  உதட்டில்  மட்டுமே
இன்று.


 துன்பம் கணடு  கலங்காது
என்னுள் எழும்  தாபங்கள்
அடங்கி தாகங்கள் குறைந்து
மௌனமாக அளவளாவிறேன்
என்னோடு என்னோடேயே.




No comments:

Post a Comment