Wednesday, January 20, 2016

ஒரு விளையாட்டுப் பொம்மையாக

சிட்டுக் குருவி  என்னுடயை  சாளரத்தில்
வந்து அமர
எதோ சேதி சொல் வந்திருக்கிறதோ
 என்று நான் எண்ண
அது என்னை  சற்றுக் கூட கண்டு
 கொள்ளவில்லை

ஆற அமர அது அழகாக தன்னை
 நிறுத்திக்  கொள்ள
 எதோ காரணமாகத்  தான் வந்திருக்கிறது
 என்று நான் கருத
அது  என்னை சற்றுக் கூட கண்டு
 கொள்ளவில்லை .


தன அலககால்   சாளரக் கட்டையை
இடை விடாமல் கொத்த
ஏதடா  இது வம்ப்பாகிப் போனதே
என்று நான் பதற
அது என்னை சற்றுக் கூட கண்டு
கொள்ளவில்லை,

தேக்கு மரத்தி லான கட்டையும் பொல பொலவென்று
கிழே கொட்ட
ஏய், ஏய், என்று விரட்டி அடிக்கும்  முயற்சியாக
கூப்பாடு போட
அது  என்னை சற்றுக் கூட  கண்டு
கொள்ளவில்லை..


ஒரு குருவியுடன் போட்டி மிக வேகமாக
நான் நடத்த
 என்னுடைய  மகன் சற்று தூரத்திலிருந்து
வேடிக்கைப் பார்க்கிறான்
  சிட்டுக்  குருவிக்கும் குட்டிச்  சிறுவனுக்கும்  நான்
 ஒரு  விளையாட்டுப் பொம்மையாக














No comments:

Post a Comment