Wednesday, January 20, 2016

எண்ணிக்கையில் அவன்.

எட்டூர் அழகன் என்று
 அவன் பரணி மிக்க
ஏழூர்    கடையும்
மேற் பார்ப்பான்
 என்று  பேசப்பட
 ஆறு ஊர் விவகாரமும்
தலை  யிட்டு  முடிப்பான்
என்ற பெயரும் 
ஐந்து  ஊர்  நிலைமையும்
அறிந்து தெளிந்தவன்
 என்ற  எண்ணமும்
 நான்கு ஊர்  வளமையும்
 நட ப்பும் புரிந்தவன்
 என்ற விவரமும்
 மூன்று ஊர் பெருமையும்
அழகாக எடுத்து உரைப்பவன்
என்ற கருத்தும்  
இரண்டு ஊரிலும்  வாழும்
நடைமுறை நிகழ்வும்
ஒர்  ஊரிலும்  அளவாக
வாழும் அற்புதமும்
அறிந்த உவகையுடன்
பெருமிதம்  கொள்கிறேன்.













No comments:

Post a Comment