Friday, January 22, 2016

பாட வந்தான் கவிஞன்

பாட வந்தான் கவிஞன் 
பாடவேயில்லை 
அலைமோதிய கூட்டம் 
ஆவலோடு நோக்க 
வாளாவிருந்தான் 
கவிஞன் 

மெய்மறந்து எங்கோ 
பார்த்தப்படி இருந்தான் 
மணித்துளிகள் மணி 
நேரமாக கண்கள் nilai 
குத்தியபடி இருந்தான் 
கவிஞன். 

மக்களும் பொறுமையு டன் 
காத்திருக்க 
சட்டென்று கவி உற்று 
வெள்ளமாக 
பெருகி வர ஆனந்தம் 
பொங்க ஆராவாரமின்றி 
மனிதத் திரள் அமைதி காண 

கவிஞன் உணர்ச்சி 
பெருக்குடன் 
பொழிந்தான் தமிழை 
எதுகை மோனையுடன் 
தமிழ் கவிதை அழகாக 
நடை பயின்றாள். 


நடையா அது 
சுழன்றாள் சுற்றினாள் 
ஓடினாள் ஒம்பினாள் 
கொண்டாடினாள் 
கூத் தாடினாள் 
அழுதாள் ஆவேசமானாள். 

கவிஞன் விம்மினான் 
விதர் விதர்த்தான் 
கொஞ்சினான் 
சிணுங்கினான் சிலிர்த்து 
எழுந்தான் பின் சட்டென்று 
அடங்கினான் 
அமைதியுற்றான்.

No comments:

Post a Comment