Monday, January 18, 2016

ஆத்தா என்று அழைத்தார்கள்

ஆத்தா  என்று அழைத்தார்கள்
 நான் சிறுமியாக இருந்த போதே

 ஆத்தா சாபிட வா ஆத்தா
என்று கெஞ்சுவான் குப்புச்சாமி

 ஆத்தா பள்ளிக் கூடத்திற்கு 
 நேரமாகி விட்டது என்பான் ஆரோக்கியம்

 பு த்தகத்தை எடுத்து பையில்
 வைக்கவா என்பான் பேயாண்டி

 ஆத்தா தலைக்கு பூவை  மறக்காமல்
 வைத்துக் கொள் என்பாஅழகம்மா

இன்று அவர்கள் யாரும் இல்லை
 நான் மட்டும் இருக்கிறேன்
ஆத்தாவாக என் குழந்தைகளுக்கு


No comments:

Post a Comment