Monday, February 10, 2014

என் அருமை மனிதன்

சற்று தள்ளி நின்று உலகத்தைப் பார்த்தால் 
சுற்று உயரே இருந்து நோக்கினால் 
தெரியும் முறை ஒரு படிப்பினை .

மனிதனி ன் வேகம்  ஒரு உதாரணம் 
எங்கு செல்கிறான் தினப் பொழுதும் 
எங்கு விரைகிறான் எப்போதும் 
ஆழ்ந்த  யோசனையுடன் .

மரத்தின் மீது ஏறி  அமர்ந்தேன் 
சில மணி நேரம் ஒரு ஆர்வதத்துக்காக  
கண்டேன் மனிதர்களை  ஆசவாசமே இல்லாமல் 
எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.

நிதானம் என்பதே இல்லாமல்  ஓடி ஓடி 
பணம் பணம் என்று அதன் பின்னே சென்று 
 அதை அடைய வழிகள்  பல தேடி 
நிம்மதியிழந்து வலுவிழந்து போகிறான் .

பல அற்புதங்களை காணாமல் 
பல அறிவார்ந்த நிகழ்ச்சிகளை தவறவிட்டு 
நல்ல தூக்கம்  இல்லாமல் கண் சிவக்க 
 நிற்கிறான் என் அருமை மனிதன் 

No comments:

Post a Comment