Wednesday, February 5, 2014

பிறந்தது மகா கவி.

வாயினுள்  புகுந்த  ஈ
போய்  வந்தது
பல தடவை.

 அறியாமல்   இருந்தான்
 பன் மொழிப் புலவன்
கவனம் சிதறி .

கையிலே   பெரிய போத்தல்
 கண்ணிலே கிறக்கம்
அறிவு மழுங்கி

வெளியாயின  வரிகள்
அணி சேர்ந்து
அமுதமான்  கவி.

இலக்கணம் தட்டாமல்
இலக்கியம்  பொங்க
பிறந்தது  மகா கவி.


.நிலையில்லா நிலமையில்
 மதுவின்  கையில்
தோன்றியது ஒரு அற்புதம்









No comments:

Post a Comment