Tuesday, February 11, 2014

பார்வை

விளக்கின் ஒளியில்
 தெரியும் பல குறைபாடுகள்
 குறைவான்வெளிச்சத்திலே
எடுப்பாகத் தெரியாது .

குறை காணும் நோக்கிலே கண்டால்
 நிறை  தோன்றாது
 இல்லாத குறையெல்லாம்
மிகுதியாகத் தோன்றும் .

நிறை கண்டு நோக்கினால்
குறை கண்ணுக்குப்  புலப்படாது .
குறையும் நிறையாகத்   தோன்றும்
மகிழ்வு ஏற்படும் .


கண்ணிலே இருக்கிறது
 நிறையும் குறையும்
சாளரம் வழி பார்ப்பவனுக்கு
 மண்ணும் தெரியும்  வானமும் தெரியும்.




No comments:

Post a Comment