மாலை சாயும் பொழுது
ஓர் அமைதி எங்கும் நிலவ
தளர்ச்சி தொங்கி நிற் க்கும் வேளை
வேலை முடிந்த கையோடு
மக்கள் விடு திரும்பும் நேரம்
அலைந்து பறந்து சேகரித்த
உணவோடு கூடு திரும்பும் குருவிகள்
சட்டென்று ஏற்படும் ஆயாசம்
யாவும் கூடி நிற்கும் சாயந்திரம்
ஒரு சாய நினைக்கும் பொழுதாக
ஒரு அயர்ச்சி மிக்க நேரமாக
ஒரு அமைதியை நாடும் பொழுதாக
இருப்பதனால் தான் அந்தி படும் காலம்
சாயும் சாயந்திரம் எனப்பட்டதோ
No comments:
Post a Comment