Friday, February 7, 2014

சாயந்திரம்

மாலை சாயும் பொழுது
 ஓர் அமைதி எங்கும் நிலவ
தளர்ச்சி தொங்கி நிற் க்கும் வேளை   
வேலை முடிந்த கையோடு 
 மக்கள்  விடு திரும்பும் நேரம் 
 அலைந்து பறந்து சேகரித்த 
உணவோடு கூடு திரும்பும்  குருவிகள் 
சட்டென்று ஏற்படும் ஆயாசம் 
யாவும் கூடி  நிற்கும்  சாயந்திரம்
 ஒரு சாய நினைக்கும் பொழுதாக 
ஒரு அயர்ச்சி மிக்க நேரமாக 
ஒரு அமைதியை  நாடும் பொழுதாக 
இருப்பதனால் தான் அந்தி படும் காலம் 
 சாயும்  சாயந்திரம் எனப்பட்டதோ 

No comments:

Post a Comment