Wednesday, February 5, 2014

போகும் வழி

வழியிலே  ஒரு நெருக்கடி
தாமதம் மிகவே
 சென்றேன் குறுக்கு வழியிலே
போகாத வழியில்
போகும் போது
கண்டேன் ஒரு
அதிசயத்தை.

ஒரு  கலைக்  கூடத்தை
அருமையான வேலைப்பாடு
 செந்நிறக் கற்களாலே
தூணின்உயரமும்  கம்பிரமும்
உத்தரத்தில் தெரிந்த
நுணுக்கமான அலங்காரமும்
கண் கொள்ளா அழகு

தேக்க மரத்தில் இழையோடிய
 ரேகையும், செம்மையுமே
அதன் வனப்பும்
தரையிலே கண்ட
பளபளப்பும்
பேசின  பல  கதைகள்  
மௌனமாகவே.


இனம் தெரியாத
 புல்லரிப்புடன்
 கிளம்பினேன்  மனமில்லாமல்
போகும் வழி  தடை
இல்லாமலிருந்தால்
இவ் வழி  வந்து
கண்டிருக்க மாட் டேன்
இந்த மாண்பினை 
  

No comments:

Post a Comment