Tuesday, February 18, 2014

பேச வராது .

கடித்து மென்று துப்பி பேசுவான் 
சரளமாக பேச வராது .

இழு இழு என்று இழுத்துப் பேசுவான் 
வேகமாகப் பேச வராது .

திக்கி திணறிப் பேசுவான் 
நேராகப் பேச வராது .

 முன் னே பின்னே  பேசுவான் 
உண்மை பேச வராது
..
திருப்பி திருப்பி பேசுவான் 
புதிதாகச் சொல்ல வராது.

  இருந்தும் பேசிக் கொண்டிருப்பான் 
அவனாகத தனக்குள்ளே.

No comments:

Post a Comment