கடித்து மென்று துப்பி பேசுவான்
சரளமாக பேச வராது .
இழு இழு என்று இழுத்துப் பேசுவான்
வேகமாகப் பேச வராது .
திக்கி திணறிப் பேசுவான்
நேராகப் பேச வராது .
முன் னே பின்னே பேசுவான்
உண்மை பேச வராது
..
திருப்பி திருப்பி பேசுவான்
புதிதாகச் சொல்ல வராது.
இருந்தும் பேசிக் கொண்டிருப்பான்
அவனாகத தனக்குள்ளே.
No comments:
Post a Comment