Saturday, February 8, 2014

எங்கள் தமிழ் திரு நாடு.

காவிரி பாயும் நாடு
வை கை ஓடும் நாடு
 தாமிரவரு ணிதுள்ளி  ஓடும் நாடு
 எங்கள் தமிழ் திரு நாடு.

நெல்லும் கனியும் விளைந்த நாடு
பூவும் மொட்டும் பூத்த நாடு
காயும்  கரும்பும்  கவிந்த நாடு
எங்கள் தமிழ் திரு நாடு.

காவிரி  விரிந்த செல்கிறது
ஒரு பெரும் மண ற்பரப்பாக
வைகை காய்ந்து கிடக்கிறது
தாமிரவருணி  தேய்ந்து  நிற்கிறது..

கல்லும் மண்ணும் விற்கப்பட்டு 
காசும் பணமுமுமாகி
நிலமும்  கிணறும் கண்மாயும்
கட்டிடமாக   ,உயர்ந்த நிற்க 

குடிக்கத் தண்ணீருக்குத் தவிக்கும் நாடாகி
 ஒரு துளி நீர் என் கூக் குரல் ஒங்க
கண் கெட்ட பிறகும்  வேண்டுவது
என்னமோ தமிழனுக்கு கை வந்த கலை


No comments:

Post a Comment