Friday, February 7, 2014

காதிலே பூ

காதிலே பூ  வைக்கிறான்
சுற்றி சுற்றி   வளமும் இடமுமாக
பலவாகச் சுற்றுகிறான்
பல முறை சுற்றுகிறான்
காது கிழியும் வரை

சுற்றுபவன் சுற்றுவான்
 பொய்யை அழகாக
சுருட்டி  பந்தாக
கேட்பவனுக்கு இனிமையாக
புனைவான் பொய்யை .


இல்லாததை சுழுட்டுவான்
இருப்பதை மறைப்பான்
சுண்டி இழுப்பான் கவர்ச்சியாக
பொய் பேச்சாலே
பந்தாடுவான்  நன்றாகவே.


அவன் தனியன் அல்ல
அவனுடன் பல் பேர்
சுற்றுகிறார்கள்  அங்கும்
இங்கும் சழன்று கொண்டே
வைக்கிறார்கள்  பந்தமாகவே
பூ காதிலே..

No comments:

Post a Comment