Wednesday, February 5, 2014

பேறு

 பஞ்சணை யிலே  கண் துஞ்சாமல்
பிரண்டு  பிரண்டு  படுத்தாள்.

 கண்ணிலே நீர்  வழிய
குமைந்து குமைந்து அழதாள் .

தோளிலே கை வைத்து
 மெதுவாக கன்னத்தை  திருப்பினான் .

முகம் சிவக்க  உதடு துடிக்க
குலுங்கினாள்  அவன் மடியில் விழுந்து.

பூப் போன்ற கைகளை  எடுத்து
 வருடினான்   இதமாக .

கதறினவள்  சற்றே அமைதியானாள்
அவனின் தோளிலே .

திணறி திணறி உடைந்த குரலிலே சொன்னாள்
கரு கலைந்ததை.

 மனம் பதறிய அவன்  அவளை மேலும்
தன்னோடு இறுக   அனைத்துக் கொண்டான்.

இருவருக்கும் வயது இருக்க வருத்தம் களைந்து
மிண்டும்  கிட்டும்   அபபேறு   சடுதியிலே என்று வாழ்த்துக .

.


No comments:

Post a Comment