Friday, February 14, 2014

அவளும் கண்ணாடியும்

கண்ணாடி முன் நின்றாள் 
பார்த்தாள் வெகு நேரம் 
 தன்னையே .

இது அவளின் பழக்கம் 
தன்னை நோக்குவது 
 என்பது.

தன அழகிலே  அதன் தோற்றத்திலே 
 அவள்  நினைப்பு  அதுவாக 
மயங்குவான் போல் 

பேரழகி என்ற நினைப்பிலே 
 பாவம் வாழ்கிறாள் 
 வெகு நாளாக .


கண்ணாடியும் துணை போகிறது 
அவளுடன் கை கோர்த்துக் கொண்டு 
வேடிக்கை .


உண்மையைச்  சொல்கிறேன் 
 அவள் புரிந்து கொள்ளவில்லை
என்ற முணு முணு ப்பு .

எங்கே என்று திரும்பினால்  ?
கண்ணாடி பேசுகிறது 
விநோதமாக 

இப்போது தான் நான் 
தனித்து இருக்கிறேன் 
என்று அழு தது.

அதற்குள்  அவள் வந்தாள்
கண்ணாடி கண்ணைக்  காட்டியது 
 ஒரே அமைதி.  




No comments:

Post a Comment