கண்ணாடி முன் நின்றாள்
பார்த்தாள் வெகு நேரம்
தன்னையே .
இது அவளின் பழக்கம்
தன்னை நோக்குவது
என்பது.
தன அழகிலே அதன் தோற்றத்திலே
அவள் நினைப்பு அதுவாக
மயங்குவான் போல்
பேரழகி என்ற நினைப்பிலே
பாவம் வாழ்கிறாள்
வெகு நாளாக .
கண்ணாடியும் துணை போகிறது
அவளுடன் கை கோர்த்துக் கொண்டு
வேடிக்கை .
உண்மையைச் சொல்கிறேன்
அவள் புரிந்து கொள்ளவில்லை
என்ற முணு முணு ப்பு .
எங்கே என்று திரும்பினால் ?
கண்ணாடி பேசுகிறது
விநோதமாக
இப்போது தான் நான்
தனித்து இருக்கிறேன்
என்று அழு தது.
அதற்குள் அவள் வந்தாள்
கண்ணாடி கண்ணைக் காட்டியது
ஒரே அமைதி.
No comments:
Post a Comment