Friday, February 14, 2014

குழந்தை மனிதனாகிறான்

தத்தி  தத்தி நடந்த குழந்தை
 சப்பி சப்பி  கண்டது
 அபார ருசியை

கத்தி கத்தி அழுத குழந்தை
சப்பி சப்பி அமைதியானது
கட்டை விரலை.

சப்பி சப்பி அவ்விரல்
 சூம்பிப் போனது
விரைவிலே .


பாலும் அமுதும்
பாசமும் அன்பும் கண்டது
 அவ்விரலிலே.

பாதுகாப்பும்   அனுசரணையும்
தாயும் கண்டது  குழந்தை .
 அவ்விரலிலே.


தாதி தத்தி நடந்து
சப்பி சப்பி வளர்ந்து
மனிதனானது  குழந்.

இன்று  தத்தி தத்தி நடக்கவில்லை
சப்பி சப்பி  ருசி காணவில்லை
அவன் குழந்தையுமில்லை.

இருந்தும் தடுமாறுகிறான்  அவ்வப் ப்போதே
சப்புக் கொட்டுகிறான்  அவ்வவப் போதே
குழந்தை போலே.


குழந்தை மனிதனாகிறான் 


  

No comments:

Post a Comment