Monday, February 3, 2014

கோபமே அவனுக்கு விலங்காக

கடு கடு என்று இருந்தான்
வள்  வள்  என்று விழுந்தான்
 கறுக்க சிவக்கப் பார்த்தான்
கோபமே உருவானான்.

கோ ப ம் ஊ ரைக் கெடுக்கும்
 பகைமை வளர்க்கும்
சுற்றமும்    நட்பும் விலகும்
என்று அறியவில்லை அவன்.


அவன் தகாத கோபம் கண்டு விலகினர்
பேசுவதைக் குறைத்தனர்
 அவனைக் கண்டால் ஒதுங்கினர்.
அவன் வட்டம் சுருங்கியது.

மாறாமல் வாழ்ந்தான் இறுதி வரை
கோபமே அவனுக்குத் துணையாக
 தனிமையில் முழு நேரம் இருந்தான்
கோபமே அவனுக்கு விலங்காக



 

No comments:

Post a Comment