சற்று முன் கண்டேன்
ஒரு தாயையும் அவள் தன குழந்தையும்
பாசமும் பரிவும் அரவணைப்பிலே.
இதனை விட எது பெரியது
காசா பணமா சொத்தா
என்று நினைத்தேன் உண்மையாக .
மற்றொரு நாள் கண்டேன்
ஒரு குரங்கையும் அதன் பச்சிளங் குட்டியும்
பிணைப்பும் கனிவும் தவறாமல் .
வியந்தேன் மனிதப் னை போல் தான் குரங்கும்
வியக்கமிகு அன்பும் ஆறுதலும் அங்குத் தெரிய
இதை விட என்ன வேண்டும் என்று உணர்ந்தேன் ..
அடுத்த நாள் என் கண்ணால் கண்டேன்
குருவியும் அதன் சிறு குஞ்சும்
கொஞ்சலும் வருடலும் இதமாக
தாயின் அன்பை விட மிகுந்தது
யாதுமில்லை யாவருக்கும்
மனிதனோ விலங்கோ பறவையோ
No comments:
Post a Comment